Skip to content

யெகோவாவின் சாட்சிகள் இயேசுவை நம்புகிறார்களா?

யெகோவாவின் சாட்சிகள் இயேசுவை நம்புகிறார்களா?

 ஆம். “நானே வழியும் சத்தியமும் வாழ்வுமாக இருக்கிறேன். என் மூலமாக மட்டுமே ஒருவரால் தகப்பனிடம் வர முடியும்” என்று இயேசு சொன்ன வார்த்தைகளை நாங்கள் நம்புகிறோம். (யோவான் 14:6) இயேசு பரலோகத்திலிருந்து பூமிக்கு வந்து தம்முடைய பரிபூரண உயிரை மனிதர்களுக்காக மீட்பு பலியாக கொடுத்ததை நாங்கள் விசுவாசிக்கிறோம். (மத்தேயு 20:28) இயேசுவின் மரணத்திலும் உயிர்த்தெழுதலிலும் விசுவாசம் வைக்கிறவர்களுக்கு முடிவில்லா வாழ்க்கை கிடைக்கும். (யோவான் 3:16) கடவுளுடைய பரலோக அரசாங்கத்தின் ராஜாவாக இயேசு இப்பொழுது ஆட்சி செய்துகொண்டிருக்கிறார் என்பதையும் அது சீக்கிரத்தில் பூமி முழுவதிலும் சமாதானத்தை கொண்டுவரும் என்பதையும் நாங்களும் நம்புகிறோம். (வெளிப்படுத்துதல் 11:15) என்றாலும், “என் தகப்பன் என்னைவிடப் பெரியவர்” என்று இயேசு சொன்ன வார்த்தைகளை நாங்கள் அப்படியே ஏற்றுக்கொள்கிறோம். (யோவான் 14:28) அவர் சர்வவல்லமையுள்ள கடவுள் என்று நாங்கள் நம்புவதில்லை என்பதால் நாங்கள் இயேசுவை வணங்குவதில்லை.