Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அடைக்கல நகரங்கள்

அடைக்கல நகரங்கள்

தெரியாத்தனமாகக் கொலை செய்தவன் தன்னைப் பழிவாங்க வருகிறவனிடமிருந்து தப்பித்து, அடைக்கலம் புகுவதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட லேவி கோத்திரத்து நகரங்கள். யெகோவா சொன்னபடி மோசேயும் பின்பு யோசுவாவும் இவற்றைத் தேர்ந்தெடுத்தார்கள். வாக்குக் கொடுக்கப்பட்ட தேசத்தில் ஆங்காங்கே மொத்தம் ஆறு நகரங்களை அடைக்கல நகரங்களாக ஒதுக்கினார்கள். தெரியாத்தனமாகக் கொலை செய்தவன் ஓர் அடைக்கல நகரத்துக்கு வந்தவுடன், நகரவாசலிலுள்ள பெரியோர்களிடம் நடந்த விஷயத்தைச் சொல்வான், அவர்களும் அவனை அங்கே தங்குவதற்கு அனுமதிப்பார்கள். வேண்டுமென்றே கொலை செய்தவன், இந்தச் சலுகையைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுப்பதற்கு ஓர் ஏற்பாடு இருந்தது. அதாவது, அடைக்கலம் தேடி வருகிறவன், கொலை நடந்த நகரத்துக்குக் கொண்டுபோய் விசாரிக்கப்படுவான். நிரபராதி என்பது நிரூபிக்கப்பட்டால் அவன் மறுபடியும் அடைக்கல நகரத்துக்குத் திரும்பி வந்து, தன் வாழ்நாள் முடியும்வரை அல்லது தலைமைக் குரு சாகும்வரை அங்கேயே தங்கியிருக்க வேண்டியிருந்தது, அந்த நகரத்தைவிட்டு வெளியே போக அவனுக்கு அனுமதி இல்லை.—எண் 35:6, 11-15, 22-29; யோசு 20:2-8.