Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உயிர்த்தெழுதல்

உயிர்த்தெழுதல்

இறந்தவர்கள் உயிரோடு எழுவது. அனஸ்டாசிஸ் என்ற கிரேக்க வார்த்தைக்கு “எழுவது, நிற்பது” என்று அர்த்தம். இயேசுவை யெகோவா தேவன் உயிர்த்தெழுப்பியதையும் சேர்த்து மொத்தம் 9 உயிர்த்தெழுதல்களைப் பற்றி பைபிள் சொல்கிறது. எலியா, எலிசா, இயேசு, பேதுரு, பவுல் ஆகியோர் உயிர்த்தெழுப்பி இருந்தாலும், அவர்கள் கடவுளின் சக்தியால்தான் அப்படிச் செய்தார்கள். கடவுளுடைய நோக்கம் நிறைவேறுவதற்கு, “நீதிமான்களும் அநீதிமான்களும்” இந்தப் பூமியில் உயிர்த்தெழுப்பப்படுவது அவசியம். (அப் 24:15) பரலோக உயிர்த்தெழுதலைப் பற்றியும் பைபிள் சொல்கிறது. அதை ‘முந்தின உயிர்த்தெழுதல்’ அல்லது ‘முதலாம் உயிர்த்தெழுதல்’ என்று குறிப்பிடுகிறது. கடவுளுடைய சக்தியால் அபிஷேகம் செய்யப்பட்ட இயேசுவின் சகோதரர்கள் பரலோகத்துக்கு உயிர்த்தெழுப்பப்படுகிறார்கள்.—பிலி 3:11; வெளி 20:5, 6; யோவா 5:28, 29; 11:25.