Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கூடாரப் பண்டிகை

கூடாரப் பண்டிகை

சேகரிப்புப் பண்டிகை என்றும் இது அழைக்கப்படுகிறது. இந்தப் பண்டிகை, ஏத்தானீம் மாதம் 15-ஆம் தேதியிலிருந்து 21-ஆம் தேதிவரை நடந்தது. இஸ்ரவேலர்களின் விவசாய வருடத்தின் முடிவில் அறுவடைக்குப் பிறகு இது கொண்டாடப்பட்டது. தங்களுடைய விளைச்சலை ஆசீர்வதித்ததற்காக யெகோவாவுக்கு நன்றி சொல்லவும், சந்தோஷமாக இருக்கவும் இஸ்ரவேலர்கள் இதைக் கொண்டாடினார்கள். எகிப்திலிருந்து விடுதலையானதை நினைத்துப் பார்ப்பதற்காக, இந்தச் சமயத்தில் ஜனங்கள் கூடாரங்களில், அதாவது பந்தல்போட்ட இடங்களில், தங்கினார்கள். ஒவ்வொரு வருஷமும் ஆண்கள் எருசலேமுக்குப் போய்க் கொண்டாட வேண்டியிருந்த மூன்று பண்டிகைகளில் இதுவும் ஒன்று.—லேவி 23:34; எஸ்றா 3:4.