Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

தோல் சுருள்

தோல் சுருள்

செம்மறியாடு, வெள்ளாடு மற்றும் கன்றுக்குட்டியின் தோலால் செய்யப்பட்ட பொருள்; இது எழுதுவதற்காகப் பயன்படுத்தப்பட்டது. பாப்பிரஸ் புல் சுருள்களைவிட நீடித்து உழைத்தது. அதனால் பைபிள் எழுதுவதற்கு இது பயன்படுத்தப்பட்டது. பவுல் தீமோத்தேயுவிடம் கொண்டுவரச் சொன்ன தோல் சுருள்கள், அநேகமாக எபிரெய வேதாகமத்தின் சில பாகங்களாக இருந்திருக்கலாம். சவக்கடல் சுருள்களின் சில பாகங்கள் தோல் சுருள்களில் எழுதப்பட்டிருந்தன.—2தீ 4:13.