Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பெர்சியா; பெர்சியர்கள்

பெர்சியா; பெர்சியர்கள்

பெர்சியா என்பது ஒரு தேசம், அதில் வாழ்ந்தவர்கள் பெர்சியர்கள். இவர்கள் பெரும்பாலும் மேதியர்களோடு சேர்த்து குறிப்பிடப்படுகிறார்கள். பெர்சியர்களுக்கும் மேதியர்களுக்கும் சம்பந்தம் இருந்ததாகத் தெரிகிறது. ஆரம்பத்தில், ஈரான் பீடபூமியின் தென்மேற்குப் பகுதிதான் பெர்சியர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. மேதியாவும் பெர்சியாவும் இரட்டை ஆட்சியாக இருந்தபோதிலும், மகா கோரேசுவின் (பழங்கால சரித்திர ஆசிரியர்களின்படி, இவருடைய அப்பா பெர்சியாவைச் சேர்ந்தவர், அம்மா மேதியாவைச் சேர்ந்தவர்) ஆட்சியில் பெர்சியர்கள் மேதியர்கள்மீது ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தார்கள். கி.மு. 539-ல், கோரேசு பாபிலோன் சாம்ராஜ்யத்தைக் கைப்பற்றினார். பிறகு, அங்கே சிறைபட்டிருந்த யூதர்களைத் தங்களுடைய தாய் நாட்டுக்குத் திரும்பிப் போக அனுமதித்தார். கிழக்கே சிந்து நதிமுதல் மேற்கே ஏஜியன் கடல்வரை பெர்சியர்களுடைய சாம்ராஜ்யம் பரந்துவிரிந்திருந்தது. கி.மு. 331-ல் மகா அலெக்ஸாண்டர் பெர்சியர்களைத் தோற்கடிக்கும்வரை யூதர்கள் பெர்சியர்களுடைய ஆட்சியின்கீழ் இருந்தார்கள். பெர்சிய சாம்ராஜ்யம் உருவாவதைப் பற்றி தானியேல் முன்கூட்டியே ஒரு தரிசனத்தில் பார்த்திருந்தார். எஸ்றா, நெகேமியா, எஸ்தர் ஆகிய புத்தகங்களிலும் பெர்சிய சாம்ராஜ்யத்தைப் பற்றிச் சொல்லப்பட்டுள்ளது. (எஸ்றா 1:1; தானி 5:28)—இணைப்பு B9-ஐப் பாருங்கள்.