Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

வழிபாட்டுக் கூடாரம்

வழிபாட்டுக் கூடாரம்

எகிப்திலிருந்து இஸ்ரவேலர்கள் விடுதலையாகி வந்த பின்பு, வழிபாட்டுக்காகப் பயன்படுத்திய கூடாரம். இதை ஓர் இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குக் கொண்டுபோக முடிந்தது. கடவுளுடைய பிரசன்னத்துக்கு அடையாளமாக இருந்த ஒப்பந்தப் பெட்டி அதில் வைக்கப்பட்டிருந்தது. மக்கள் அங்கே பலி செலுத்தினார்கள், கடவுளை வணங்கினார்கள். இது சில சமயங்களில், ‘சந்திப்புக் கூடாரம்’ என்று அழைக்கப்பட்டது. இது மரச்சட்டங்களால் செய்யப்பட்டிருந்தது. மரச்சட்டத்தைச் சுற்றி நாரிழை விரிப்பு போடப்பட்டிருந்தது. இதில் கேருபீன் வடிவத்தில் தையல் வேலைப்பாடு செய்யப்பட்டிருந்தது. வழிபாட்டுக் கூடாரம் இரண்டு அறைகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. ஒன்று, பரிசுத்த அறை. இன்னொன்று, மகா பரிசுத்த அறை. (யோசு 18:1; யாத் 25:9)—இணைப்பு B5-ஐப் பாருங்கள்.