சங்கீதம் 130:1-8

நகரத்துக்கு ஏறிப்போகிறவர்கள் பாடுகிற பாடல். 130  யெகோவாவே, ஆழத்திலிருந்து* உங்களைக் கூப்பிடுகிறேன்.+   யெகோவாவே, என் குரலைக் கேளுங்கள். உதவிக்காக நான் கெஞ்சுவதை உங்கள் காதுகளால் கவனித்துக் கேளுங்கள்.   “யா”வே,* நீங்கள் குற்றங்களைக் கவனிக்க* ஆரம்பித்தால்,யெகோவாவே, யார் உங்கள் முன்னால் நிற்க முடியும்?+   நீங்கள் மனதார மன்னிக்கிறீர்கள்.+அதனால் உங்கள்மேல் பயபக்தி உண்டாகிறது.+   நான் யெகோவாவையே நம்பியிருக்கிறேன், என் ஜீவன் அவரையே நம்பியிருக்கிறது.அவருடைய வார்த்தைக்காக நான் காத்திருக்கிறேன்.   காவல்காரர்கள் விடியலுக்காகக் காத்திருப்பதைவிட,ஆம், காவல்காரர்கள் விடியலுக்காகக் காத்திருப்பதைவிட,+அதிக ஆவலோடு நான் யெகோவாவுக்காகக் காத்திருக்கிறேன்.+   இஸ்ரவேல் யெகோவாவுக்காகக் காத்திருக்கட்டும்.ஏனென்றால், யெகோவா மாறாத அன்புள்ளவர்.+விடுவிப்பதற்கான வல்லமை அவரிடம் அளவில்லாமல் இருக்கிறது.   இஸ்ரவேலர்களை அவர்களுடைய எல்லா குற்றங்களிலிருந்தும் அவர் விடுவிப்பார்.

அடிக்குறிப்புகள்

வே.வா., “ஆழ்ந்த வேதனையில்.”
“யா” என்பது யெகோவா என்ற பெயரின் சுருக்கம்.
வே.வா., “கணக்கு வைக்க.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா