Skip to content

யெகோவாவின் சாட்சிகள் ஏன் வீடுவீடாய் செல்கிறீர்கள்?

யெகோவாவின் சாட்சிகள் ஏன் வீடுவீடாய் செல்கிறீர்கள்?

 ‘எல்லாத் தேசத்தாரையும் சீடராக்குங்கள்’ என்று இயேசு தம்மை பின்பற்றியவர்களிடம் சொன்னார். (மத்தேயு 28:19, 20) தமது ஆரம்பகால சீடர்களை அனுப்பும்போது மக்களின் வீடுகளுக்கு போகுமாறு கட்டளையிட்டார். (மத்தேயு 10:7, 11-13) இயேசுவின் மரணத்திற்கு பிறகு, முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் “பொது இடங்களிலும் வீடு வீடாகவும்” தொடர்ந்து நற்செய்தியை பரப்பினார்கள். (அப்போஸ்தலர் 5:42; 20:20) நாங்களும் முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களை பின்பற்றி மக்களை சந்திக்க வீட்டுக்கு வீடு ஊழியம் ஒரு சிறந்த வழி என கண்டிருக்கிறோம்.